states

img

காஷ்மீருக்கான ‘370’ சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்!

“ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அரசியலமைப்பின் 370-ஆவது பிரி வின் கீழான சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்  லும்” என்று தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட் தலைமையிலான 5 நீதி பதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அர சியல் சாசன அமர்வு தீர்ப்பளித் துள்ளது.

“ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்  கென்று தனியாக உள் இறை யாண்மை இல்லை” என்றும், “இந்  திய அரசியலமைப்பை ஜம்மு -  காஷ்மீரில் செயல்படுத்த மாநில அர சின் ஒப்புதல் தேவையில்லை”; என்றும் கூறியிருக்கும் அரசியல் சாசன அமர்வானது, ‘சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி தான்’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிர தேசத்திற்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதி அளித்துள்ளதால், ஜம்மு - காஷ்மீர்  யூனியன் பிரதேசமாக மறு சீரமைக்  கப்பட்டதன் செல்லுபடி தன்மை  குறித்து தீர்ப்பளிக்க வேண்டிய தில்லை என்று கூறியுள்ள உச்ச நீதி மன்றம், லடாக்-கை யூனியன் பிர தேசமாக மாற்றியது செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 30,  2024-க்குள் ஜம்மு - காஷ்மீர் சட்டப்  பேரவைக்கு தேர்தல் நடத்த நட வடிக்கை எடுக்குமாறு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொத்தம் தாக்கலான 23 ரிட் மனுக்கள்
2019 டிசம்பர் 5 அன்று ஜம்மு -  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்  பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தது, மோடி அரசின் எதேச்சதிகாரமான முடிவு; இது ஜம்மு - காஷ்மீர் மக்களின் அடிப்  படை உரிமைகளை மீறும் செயல்  என்றும், மேலும், மாநில அந்தஸ் தைப் பறித்து, ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை ஏற்க முடியாது என்  றும் உச்சநீதிமன்றத்தில் அரசியல்  கட்சிகள், சமூக செயற்பாட்டாளர் கள், தனிநபர்கள் சார்பில் 23 ரிட்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இந்த வழக்கு மீதான விசாரணையி லேயே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மேற்கண்ட தீர்ப்பை  வழங்கியுள்ளது.

4 ஆண்டுகளாக  விசாரணை இல்லை
முன்னதாக ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் 5 நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன  அமர்வு விசாரிக்கும் என்று 2019  ஆகஸ்ட் 28 அன்று உச்சநீதிமன்றம்  அறிவித்தது. விசாரணை தாமத மான நிலையில் 2021 சிபிஎம் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் முகம்  மது யூசுப் தாரிகாமி வழக்கை விரைந்து விசாரிக்க கோரி மனுத்  தாக்கல் செய்தார்.எனினும் நான்  காண்டுகளுக்குப் பிறகு, கடந்த  2023 ஜூலை 11 அன்றுதான் விசா ரணைக்கு எடுத்துக் கொண்டது.  தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்  தலைமையில் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.  கவாய், சூர்யகாந்த் ஆகிய 5 நீதி பதிகள் அடங்கிய அரசியல் சாசன  அமர்வு, கடந்த ஆகஸ்ட் 2 முதல்  செப்டம்பர் 5 வரை தொடர்ந்து 16  வேலை நாட்கள் விசாரித்து, தீர்ப்பை  ஒத்திவைத்திருந்தது.

5 நீதிபதிகள் வழங்கிய மூன்று தீர்ப்புகள்
இந்நிலையில், திங்களன்று காலை நீதிமன்றம் கூடியதும், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கி யது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் ஒரு தீர்ப்பு, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பு, நீதிபதிகள் எஸ்.கே. கவுல், சஞ்சீவ்  கண்ணா ஆகியோர் ஒரு தீர்ப்பு  இவ்வழக்கில் மூன்று தீர்ப்புகள்  வழங்கப்பட்டாலும், பெரும் பான்மை அடிப்படையில் ஒரே தீர்ப்  பாக எடுத்துக் கொள்ள வேண்டும்  என தலைமை நீதிபதி தெரி வித்தார். அதில், “ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவின் கீழான சிறப்பு  அந்தஸ்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது செல்லும்” என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக விதி தான்’ என்றும் கூறியுள்ளது.

கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தீர்ப்பு!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு விமர்சனம்

புதுதில்லி, டிச.11- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நம் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமான அம்சங்களில் ஒன்றாக இருந்திடும் கூட்டாட்சி கட்ட மைப்பின்மீது மோசமான விளைவு களை ஏற்படுத்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு மேலும் கூறியிருப்பதாவது:

ஒப்பந்தத்தில் கையெழுத்திட ‘370’ நிபந்தனையா, அல்லவா?

உச்சநீதிமன்ற தீர்ப்பில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இறையாண்மை தொடர் பாக எவ்விதமான கூறுகளையும் தக்க வைத்துக்கொண்டு கையெழுத்திடவில்லை  என்றும், எனவே ஜம்மு - காஷ்மீருக்கு என்று  தனி அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிய விதிகள் தேவைக்கு அதிகமான ஒன்று என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், ரத்து  செய்யப்பட்டுள்ள 370-ஆவது பிரிவைத் தக்க வைத்திட, இணைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவது நிபந்தனையாக இல்லையா?

வடகிழக்கிற்கான சலுகைகள் கூட இல்லாமலாகி விட்டது

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், ஜம்மு -  காஷ்மீர் இந்திய ஒன்றியத்தில் உள்ள இதர  மாநிலங்களைப் போலவே ஒன்று என்று  கூறியிருப்பதன் மூலம், வட கிழக்கு மாநி லங்களுக்கும் மற்றும் சில மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 371ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ளது போன்ற சலுகைகளையும் கூட ஜம்மு - காஷ்மீர் இழக்கிறது.

சொலிசிட்டர் ஜெனரலின் உறுதிமொழியை ஏற்று தீர்ப்பு?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, மாநில அந்தஸ்து திருப்பி அளிக்கப்படும் என்று சொலிசிட்டர் ஜெனரல் உறுதிமொழி கூறி யதை ஏற்றுக்கொண்டு, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக தரமிறக்கப்பட்டது குறித்து எதுவும் கூறா மல் தவிர்த்திருக்கிறது. அதே சமயத்தில், தனி லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்  பட்டிருப்பது செல்லத்தக்கது என்றும் கூறி யிருக்கிறது. ஆகையால், மறுசீரமைப்பு என்பது முன்பிருந்த ஒரிஜினல் நிலைக்கு  அல்ல. ஆனால் அதுவும் ஒரு பகுதி மட்டுமே.  அதுவும்கூட காகிதத்தில் அளிக்கப்பட்டுள்ள ஓர் உத்தரவாதமேயாகும். 

தேர்தல் நடத்துவதற்கான அவகாசம் விசித்திரமாக உள்ளது

மேலும் உச்ச நீதிமன்றம், 2024 செப்டம்பர் 30-க்கு முன்பு, எவ்வளவு விரை வாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை நடத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது. இவ்வாறு, இந்தத் தீர்ப்பு ஒன்றிய அரசாங்கத்திற்கு அது ஜம்மு - காஷ்மீர் மீது கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ள நீண்ட காலத்தை அளித்  திருக்கிறது. இது மிகவும் விசித்திரமான தாகும். ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும்போது, அதன் மாநில அந்தஸ்து கலைக்கப்படும் போது,  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இல்லாத  பட்சத்தில், குடியரசுத் தலைவர் நியமிக்கப் பட்ட ஆளுநரின் ஒப்புதலை மாற்றாகக் கொள்ள முடியுமா? மீண்டும், இது கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். இதர மாநி லங்களும்கூட இவ்வாறு குடியரசுத் தலை வர் ஆட்சிக்கு உட்படுத்தப்பட முடியும், அதன்  எல்லைகள் மாற்றப்பட முடியும் அல்லது அதன் மாநில அந்தஸ்து கலைக்கப்படும்.

மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து

அரசியலமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின் கீழ் உள்ள விலக்கக்கூறு (proviso column), குடியரசுத் தலைவர்  எந்தவொரு மாநிலத்தையும் மறுசீரமைப்ப தற்கான சட்டமுன்வடிவை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அதன் கருத்தைப் பெறுவதற்காக அனுப்பிட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்தத் தீர்ப்பு, புதிய மாநிலங்களை உரு வாக்குதல், பகுதிகள், எல்லைகள் அல்லது இருக்கும் மாநிலங்களின் பெயர்களை மாற்றுதல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு ஒன்றிய அரசாங்கத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. இது கூட்டாட்சித் தத்து வத்தையும், சட்டமன்றங்களின் உரிமை களையும் ஆழமான முறையில் அரித்து வீழ்த்திடும்.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வா யத்தில் பிரதான தீர்ப்பும், மற்றும் அதற்கு இணக்கமான இரு தீர்ப்புகளுடன், முழுமை யாக ஆய்வு செய்த பின்னரே விவரமாக இத்தீர்ப்பு குறித்து தெரிவித்திட முடியும். 

எனினும், இந்தத் தீர்ப்பானது நம் அர சமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அமைப் பின்மீது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும், ஒருமைப்பாடு (“integration”) என்ற பெயரில் “தேசப் பாதுகாப்பை” (national security”)ப் பிரயோகிப்பதன் மூலம் ஓர் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தவே முனைகிறது என்பது தெளிவாகிறது.                      (ந.நி.)